ஜோதிடத்தின் அடிப்படை:
வானியல் சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டது ஜோதிடம்.
வேத காலத்தில் அறிவியல் ஆன்மீகம் இரண்டும் இருந்தது.
அறிவியலின் ஒரு பகுதிதான் ஜோதிடம்.
ஜோதிடத்தில் சித்தாந்தம், சம்ஹிதை ஜாதகம் ஆகிய பிரிவுகள் உள்ளன.
சித்தாந்தம் என்பது வானியல்.
ஜாதகம் என்பது பலன் உரைத்தல்.
சம்ஹிதை என்பது ஜோதிடத்தை அறிவியல் என்பதை விளக்கும் பகுதி.
அறிவியல் ஆன்மீகம் இரண்டையும் இணைக்கும் பாலம்தான் சம்ஹிதை.
அறிவியல் என்பது காரண காரிய அளவைகளைக்கொண்டு ஆராய்வது.
இதற்கு தொடக்கமும் முடிவும் தேவை. ஆனால் ஆன்மீகம் இவற்றை தாண்டி நிற்பது.
ஆன்மீகம் என்பது இயற்பியலுக்கும் காரண காரியங்களுக்கும் அப்பால் சிந்திப்பது ஆகும்.
ஆன்மீகம் எவ்வாறு அறிவியலோடு பல நிலைகளில் பொருந்திப்போகிறது.
நிலையில்லா பொருள்-நிர் குண பிரம்மம்
உத்வேக ஆற்றல் - பராசக்தி
திடப் பொருள் - சிவசக்தி
எதிர்பொருள் - காளி, ருத்ரன்
குவாண்டம் - அர்த்தநாரி
எல்லையற்ற பிரபஞ்சம் - பாற்கடல்,
இவ்வாறு பொருந்துகிறது.
ஜோதிடத்திற்கு அடிப்படை வானியல் சாஸ்திரம்,
இதில் 7 கிரகங்கள் உள்ளன.
மேலும் பூமியையும் சூரியனையும் சந்திரன் சுற்றுவதால் ஏற்படும் ராகு கேது என்ற இரு புள்ளிகளும் உள்ளன.
பூமியில் ஏற்படும் நில நடுக்கம், பூகம்பம், மழை, புயல், வெள்ளம், வறட்சி, மனிதர்கள் பிறப்பது, இறப்பது, நோய் தாக்குதல் நல்ல நிகழ்ச்சி ஏற்பட இவையே காரணம். இவற்றை கணித்துக் கூறுவதே ஜோதிடம்
கணிதம், காலம், அளவையியல், வானியல் ஆகியவற்றின் வெளிப்பாடுதான் ஜோதிடம்.
மனிதனை ஜோதிடம் நட்சத்திரம், ராசி, லக்கினம் என்ற அடிப்படையில் பிரிக்கிறது.
மரபியல் மரபுக்கூறுகளின் அடிப்படையில் பிரிக்கிறது.
மரபணு சோதனை மூலம் நோயற்ற மனிதனை உருவாக்குவது போல்
ஜோதிடம்மூலம் செய்யப்படும் திருமணப்பொருத்தம் தலை சிறந்த சந்ததிகளை உருவாக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக